Friday, March 7, 2008

நாகி - பிரான்ஸ்

இனிய சகோதரி,

உங்கள் மனவோசையை வாசிக்கத் தொடங்கி, இதுவரை என்னால் இருபது பதிவுகளைத்தான் வாசிக்க முடிந்தது( வேறு சில பணிகள் காரணமாக நேற்றுதான் தொடங்கினேன்). இன்றைக்கு அநேகமாக முடித்து விடுவேன்.

இவைகள் வெறும் கதைகளல்ல என்னைச் சுற்றியுள்ள யதார்த்தங்கள் என்று முதலிலேயே சொல்லி விடுகிறீர்கள், புனைவுகளும் உண்மைசார்ந்ததாக இருக்கிற போதுதான் அவைகளுக்கு விமோசனம் கிடைக்கின்றன. அதனாற்தானோ என்னவோ பல நேரங்களில் எது நிஜம் எது நிழலென்கிற சிக்கலிலிருந்து மீள முடியாமற் செய்து விடுகிறது.

புலம்பெயருகிற போதே சோதனைகள் தொடங்கி விடுகின்றன (சொல்லிச் சென்றவள் நல்ல உதாரணம்) புலம் பெயர்ந்த வாழ்க்கையில் பெண்கள் தரப்பு அவலஙளை இவ்வளவு ஆழமாக வாசித்ததில்லையென்றே சொல்ல வேண்டும். நல்ல கண்வன்மார்களும் ஜெர்மனியில் இருப்பார்களே கண்ணிற் படவில்லையா, சந்துரு,மரியதாஸ், சங்கர், மாதவன், சேகரென்று நிறைய வில்லன்கள் வருகிறார்கள். அத்தனையும் உண்மையா?

ஊர் நினைவுகளிலிருந்தும் மீளாமல் இருக்கிறீகள் என்பது நூல் நெடுகிலும் தெரிகிறது. ஜெர்மனீய அனுபவஙளில் இல்லாதா சோகம் ஊர் நினைவுகளில் அதிகமாக வெளிப் பட்டிருக்கிறது, வாசிப்பவர்களும் உணரமுடியும்.

படித்தவற்றுள் "பயணம், கணேஷ்மாமா, அக்கரைபச்சை, தீர்க்க தரிசனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. வாழ்த்துக்கள்.

நாகி
பிரான்ஸ்
Tue, Feb 26, 2008 at 9:23 AM

No comments: